சாஸ் தயாரிப்பு தொழில்

‘வ ல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதேபோல
கிடைக்கிற பொருள் எதுவாக இருந்தாலும் அதை வைத்து தொழில் நடத்தி லாபம்
பார்க்க முடியும் என்பதற்கு சாஸ் தயாரிப்பு எளிய உதாரணம்!
சென்னையில் சாஸ் தயாரிப்பில் முழுவேகத்தில்
செயல்பட்டு வரும் ளிபிவிஷி நிறுவனத்தின் சுப்பாராவையும் தியாகராஜனையும்
சந்தித்துப் பேசிய போது, சாஸ் தயாரிப்பு வீட்டில் இருந்தே சிறு தொழில்
செய்ய ஆசைப்படும் பெண்களுக்கு ஏற்ற வாய்ப்பு என்பது புரிந்தது.
‘‘இருபது ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக ஒரு ஓட்டலில்
சுவைத்த சாஸ், எங்கள் ஆர்வத்தைத் தூண்ட, இப்போது தமிழ்நாடு முழுக்க சாஸ்
சப்ளை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம்’’ என்றார்கள் இருவரும்!

இப்போது பாஸ்ட்ஃபுட் கடை களும், ஓட்டல்களும் பெருகிக்
கொண்டே இருப்பதால் மார்க்கெட்டில் சாஸ்களுக்கு டிமாண்ட் குறையவே
போவதில்லை. அதனால், நம்பிக்கை யோடு சாஸ் தயாரிப்பில் இறங்கலாம்.
‘ஒரு கிலோவுக்கு அரைலிட்டர் சாஸ்… இதுதான் அளவு!
எந்தளவுக்கு சாஸ் தயாரிக்கவேண்டுமோ அதைப்போல இரண்டு மடங்கு தக்காளியை
வேகவைத்து, அரைத்து வடிகட்டி, அதோடு சர்க்கரை அல்லது மிளகாய் தூள், உப்பு,
வினீகர் போன்றவற்றை சுவைக்கு ஏற்ப சேர்த்து கூடவே, நன்கு அரைத்த வெங்காயம்
மற்றும் லவங்கம், பட்டை, கிராம்பு பவுடர் சேர்த்து மீண்டும் வேகவைத்து
இறக்கினால் சாஸ் ரெடி! தக்காளியைக் கொண்டே புளிப்பு, காரம், இனிப்பு என பல
சுவைகளில் சாஸ் தயாரிக்கலாம்’’ என்றார் சுப்பாராவ்.


மூலப்பொருளான தக்காளி உள்ளூரிலேயே கிடைக்கிறது.
அதிகளவில் தயாரிக்கும்போது விவசாயிகளிடம் ஒப்பந்த முறையில் நேரடியாக
வாங்கிக்கொள்ளலாம். சிறிய அளவில் தயாரித்து விற்பனை செய்வதாக இருந்தால்
இயந்திரங்கள் எதுவும் வாங்கத் தேவையில்லை. வீட்டிலேயே மிக்ஸியில் அரைத்து
அடுப்பில் கொதிக்க வைத்து தயாரித்துவிடலாம். நமக்கு என்று தனி மார்க்கெட்டை
பிடித்துக் கொண்ட பின்னர், இயந்திரங்களை வாங்கிக்கொள்ளலாம்’’ என்றார்.
சுப்பாராவ் தொடர்ந்தார். ‘‘உணவுப் பொருட்களைத்
தயாரித்து விற்பனை செய்வதற்கு ‘மினிஸ்டரி ஆஃப் ஃபுட் ப்ராஸசிங்’ என்ற
மத்திய அரசு அலுவலகத்தில் சான்றிதழ் வாங்க வேண்டும். இவர்கள் லைசென்ஸ்
கொடுத்தால் மட்டுமே பெரிய அளவில் தயாரித்து விற்பனை செய்யமுடியும்.
தயாரிப்பு சாம்பிளை ஆய்வுசெய்த பின்னர், நம்முடைய தயாரிப்பு இடத்தை ஆய்வு
செய்ய வருவார்கள். மேலும் சாஸ் தயாரிக்கப் பயன்படுத்தும் தண்ணீரையும் ஃபுட்
ப்ராஸசிங் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள். எனவே தரக்கட்டுப்பாடு என்பது
இதில் மிக முக்கியம்!

தற்போது பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்பு அதிக
அளவில் இருந்து வரும் நிலையில் உள்நாட்டு தயாரிப்புகளுக்கும் ஏக வரவேற்பு
இருக்கிறது. சாஸ் தயாரிப்பில் இறங்கும்முன், நம் இடத்தைச் சுற்றி எவ்வளவு
ஃபாஸ்புட் கடைகள் இருக்கின்றன, எவ்வளவு ரெஸ்டாரென்ட்களில் சாஸ்
பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து ஓர் ஆய்வு செய்யவேண்டும். அவர்களிடம்
சாம்பிள் கொடுத்து ஆர்டர் பிடிக்கலாம். தக்காளியைத் தவிர, பிற காய்கறிகள்
விலை குறைவாகக் கிடைக்கும்போது அதை வாங்கியும் சாஸ் தயாரித்து விற்கலாம்.
குறிப்பாக மிளகாய், சோயா போன்ற பொருட்கள் மூலம் சாஸ் தயாரிக்கலாம்.
வீட்டில் இருந்தே ஒரு நாளைக்கு 50 பாட்டில்களைத்
தயாரிக்க முடியும். ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் லாபம் வைத்து விற்றாலும்
300 முதல் 500 ரூபாய் கிடைக்கும். வீட்டுத் தயாரிப்புக்கு வரி பிரச்னை
இல்லை. தக்காளி சீசன் சமயத்தில் நிறைய தயாரித்து கொடுத்து பணத்தை அள்ளலாம்.
மேலும், நம்மூரில் கிடைக்கும் பல்வேறு பழங்களைக்கொண்டு ஜாம், பழச்சாறு
முதலியவற்றையும் தயாரித்தும் காசு பார்க்கலாம். வீட்டில் உள்ள குடும்பப்
பெண்கள் மிக்ஸியை கூட பயன்படுத்தி சாஸை தயாரிக்கலாம். நன்கு அனுபவம்
பெற்றபின் பெரிய அளவில் களமிறங்கிக் காசு பார்க்கலாம்’’ என்றார்.
சாஸ் தயாரியுங்க… ஜமாயுங்க!
http://tholilvaaipugal.blogspot.co.uk/
No comments:
Post a Comment