தாமதமாக கண்டறியப்பட்ட அண்டார்டிகா 'விசித்திரம்' - விஞ்ஞானிகள் கவலை.!

தாமதமாக கண்டறியப்பட்ட அண்டார்டிகா 'விசித்திரம்' - விஞ்ஞானிகள் கவலை.! 

கிழக்கு அண்டார்டிகாவின் பனிப்படலங்களில் ஆயிரக்கணக்கான அசலான நீல ஏரிகள் தோன்றியுள்ளன என்று விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர், உண்மையில் இதுவொரு கவலை அளிக்கும் கெட்ட செய்தியாகும், பிரச்சினை என்னவென்றால் இந்த வகையான நீல ஏரிகளை இதற்கு முன்பு விஞ்ஞானிகள் கண்டறிந்ததே இல்லை..! கிரீன்லாந்தின் ஐஸ் தாள் ஆனது 2011 மற்றும் 2014 இடையே 1 டிரில்லியன் டன் என்ற ஒரு அபாரமான அளவில் விரைவாக சரிந்து வருகிறது, அதற்கு காரணமாக இந்த ஏரிகள் ஆராய்ச்சியாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

8000 ஏரிகள் : செயற்கைக்கோள் படங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வளிமண்டலவியல் தரவுகளை ஆய்வு செய்ததில் இருந்து 2000 முதல் 2013 வரை கிழக்கு அண்டார்டிகாவில், கிட்டத்தட்ட இதுபோன்ற 8000 ஏரிகள் உருவாகி உள்ளது என்பது முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மற்றும் கடலின் வெப்பநிலை : இதில் என்ன விசித்திரம் என்றால் உண்மையில் ஆராய்ச்சியாளர்கள் உயரும் காலநிலை மற்றும் கடலின் வெப்பநிலையால் கிழக்கு அண்டார்டிகா மிகவும் பாதிக்கப்படாத ஒன்று என்பதால் தங்கள் கவனத்தை எல்லாம் அண்டார்டிகா தீபகற்பத்தின் மேல் குவித்து வைத்திருந்தனர்.

கேள்விக்கு பதில் : அப்படியிருக்க ஏன் இந்த ஏரிகள் ஆயிரக்கணக்கான அளவில் திடீரென்று மூன்று ஆண்டுகளில் படிப்படியாக கிழக்கு அண்டார்டிகாவில் தோன்றியது என்ற கேள்விக்கு பதில் - காலநிலை மாற்றம்.

தொடர்பு : இந்த ஏரிகள் நேரடியாக அப்பகுதியின் காற்றின் வெப்பநிலையுடன் தொடர்பு கொள்கிறது

கவலை : ஆகையால் ஏரிகள் அதிகபட்ச மொத்த பரப்பளவு, அத்துடன் ஏரிகளின் ஆழம் ஆகிய விடயங்கள் அந்த பகுதியின் காற்று வெப்பநிலையை உச்ச நிலைக்கு கொண்டு செல்லும் தன்மை கொண்டவைகள் என்பது தான் இப்போதைய விஞ்ஞானிகளின் கவலையாகும்.

No comments:

Post a Comment

Recent Posts

பேட்டரி இன்றி உங்கள் லேப்டாப்பை இயக்க ஒரு தந்திரம் இருக்கு...!

பேட்டரி இன்றி உங்கள் லேப்டாப்பை இயக்க ஒரு தந்திரம் இருக்கு...! பொதுவாக மடிக்கணினிகள் ஒரு விண்டோஸ் அல்லது மேக்புக் எதுவாக இருப்பினும்...